குறுந்தொகை : கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
27.பாலை – தலைவி கூற்றூ
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
யாருக்கும் பயனிலை :
கன்றும் உண்ணாமல் கறக்வும் கறக்காமல்
நிலத்தில் வழியும் பசுவின் பால் போல
எனக்கும் இல்லாமல்
என் தலைவனுக்கும் உதவாமல்
என் அழகு வீணாகிறகது.
நன்றி : எழுத்தாளர் சுஜாதா (Book : 401 காதல் கவிதைகள் -குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்,உயிற்மை பதிப்பகம்)
என் சுவாசக் காற்றே படத்தின் “தீண்டாய் மெய் தீண்டாய்” பாடலுக்கு முன்னால் வரும் இந்த கவிதை குறுந்தொகை பாடலென்றும், அதன் பொருளை அறியத் தந்தமைக்கும் நன்றி!
நிறைய பேரை சென்றடைய, தமிழ் மணத்தில் இணையுங்கள்!
thanks